

கோவை நகர, அரசு பேருந்துகளில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறுவால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று காலை அரசு பேருந்து ஒன்றில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனால் பேருந்திற்காக காத்திருந்த மக்களும், சாலையில் சென்றவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பேருந்துகளை முறையாக பராமரித்து, இது போன்ற சிரமங்களை தவிர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.