

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இந்திரஜித் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஆனைக்கட்டி செல்வதற்காக காரில் பயணித்தார். அப்போது கணுவாய் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் உருக்குலைந்து போனது. இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய இளைஞர்களில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.