பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவ, மாணவிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில்.பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோருக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவ, மாணவிகள்
Published on
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில். பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோருக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 413 மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் தேர்வுகளை எதிர்கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆசி வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com