நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறையின் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், வருவாய் துறை ஆணையர் சத்யகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் செய்யப்பட்டு வரும் அடிப்படை வசதி மற்றும் மேம்பாட்டு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், அடுத்து விரைவாக முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.