

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார். தமிழ் கல்விக் கழகத்தின் சார்பில் மயூர் விகார் பள்ளி வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளிக் கட்டடத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.