பட்டாசு வெடிப்பின் போது தகராறு : கத்தியால் குத்தி இளைஞர் கொலை...

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு வெடிப்பின் போது தகராறு : கத்தியால் குத்தி இளைஞர் கொலை...
Published on

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நுக்கம்பாளையம் எழில் நகரில் வசிக்கும் சந்தீப் குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராகுல் என்பவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சந்தீப் குமாரை ராகுல் தனது நண்பர்களுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சந்தீப் குமார் உயிரிழந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com