குழந்தைகளின் ஆபாச படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம், சென்னையை சேர்ந்த 2 பேர் உட்பட 7 பேருக்கு வலைவீச்சு

குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய, சென்னையை சேர்ந்த 2 பேரை டெல்லி சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
குழந்தைகளின் ஆபாச படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம், சென்னையை சேர்ந்த 2 பேர் உட்பட 7 பேருக்கு வலைவீச்சு
Published on

கடந்த ஜனவரி மாதம் ஜெர்மனியை சேர்ந்த சாஸ்சே ட்ரெப்பெக் (sasche treppke) என்பவர், குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பியதாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜெர்மனியில் லுபெக் நகரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்ட ஜெர்மன் போலீசார் அங்கு கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்தனர்.

அப்போது 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களை அவர் நடத்தி வந்ததும், அதில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் சென்னை சேலையூரை சேர்ந்த வினோத் கண்ணா, மண்ணடியை சேர்ந்த கோசிமா, உள்ளிட்ட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து, ஜெர்மனி போலீசார் அளித்த தகவலின் பேரில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள், சேலையூர் மற்றும் மண்ணடியை பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத் கண்ணா மற்றும் கோசிமா ஆகியோர் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையயை தவிர ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம், ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 5 பேர் மீதும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com