Chidambaram | Student | செல்போனே கதி என இருந்த மாணவர்! பெற்றோர் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு
செல்போன் மோகம்-பெற்றோர் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய மாணவர்
சிதம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் செல்போனுக்கு அடிமையானதால் பெற்றோர் கண்டித்த நிலையில், வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மெய்க்காவல் தெருவில் வசித்து வருபம் குமார் - சங்கீதா தம்பதியரின் 19 வயது மகன் விஷ்வா, கல்லூரியில் பட்டய படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில், படிப்பில் கவனம் செலுத்தாமல் முழு நேரமும் செல்போனில் மூழ்கியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து வீட்டைவிட்டு விஷ்யா வெளியேறியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
