கூத்தாண்டவர் கோயில் திருவிழா - தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சிதம்பரம் அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று தாலி கட்டிக் கொண்டனர்.
கூத்தாண்டவர் கோயில் திருவிழா - தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
Published on
கொத்தட்டை கூத்தாண்வர் கோயில் திருவிழா சிலநாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருநங்கைகள் ஆட்டமாடி, பாட்டுப்பாடி, கும்மி அடித்து உற்சாகத்தும் அடைந்தனர். நள்ளிரவில் கூத்தாண்டவரை வணங்கி கோயில் பூசாரியிடம் தாலி கட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com