அதிர வைத்த ஆருத்ரா வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி | CHennaiHC

ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமாரின் பிணை மனுவைத் தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், 25வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்ட சசிகுமார் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சசிகுமாரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com