தாய்லாந்தில் இருந்து வந்த நபரை சுற்றி வளைத்த மோப்ப நாய்.. - அதிர்ந்த ஆபிசர்ஸ்..
சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்தில் இருந்து, 7 கோடி ரூபாய் மதிப்புள்ள, 7 கிலோ உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் படி, தீவிர சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன், இளைஞர் ஒருவர் கொண்டு வந்த பார்சல்களில் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
