

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்குள்ள கடைகளில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு நண்பர்களுடன் நடந்து சென்ற மணிகண்டனை 3 பேர் கும்பல் வழிமறித்து கட்டையால் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கா, ஹேமந்த்குமார், பாலு ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக மணிகண்டனை
தாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையான மணிகண்டன் மீது பல வழக்குகள் உள்ளது.