

சென்னை வண்ணாரப்பேட்டையில் நாடார் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பங்கேற்று பெண்களுக்கு, பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார். இதைதொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாமல், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக கூறினார்.