சென்னை போக்குவரத்து காவல் துறையில் அயல் பணிக்காக காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம்

சென்னை போக்குவரத்து காவல் துறையில் அயல் பணிக்காக காவலர்களை கூடுதல் ஆணையர் அனுமதியின்றி வேறு காவல் நிலையங்களுக்கு மாற்ற கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல் துறையில் அயல் பணிக்காக காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம்
Published on

சென்னை போக்குவரத்து காவல் துறையில் அயல் பணிக்காக காவலர்களை கூடுதல் ஆணையர் அனுமதியின்றி வேறு காவல் நிலையங்களுக்கு மாற்ற கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக

சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அனைத்து இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். முறையான உத்தரவுகள் இல்லாமல் அயல் பணிக்காக மாற்றப்பட்டு காவலர்கள் நீண்டகாலமாக அந்தப் பணியில் இருப்பது தவறான நடைமுறையாகும் என்று அந்த சுற்ற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அயல் பணிக்காக காவலர்களை அனுப்ப போக்குவரத்து கூடுதல் ஆணையர் அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com