Chennai Traffic | Accident | சென்னையில் பஸ்-லாரி விபத்து.. 8கிமீக்கு அணிவகுத்த ஸ்தம்பித்த ட்ராபிக்
சென்னை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸில் விபத்தில் சிக்கிய அரசுப்பேருந்தால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன சென்னை கோயம்பேட்டில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்து மதுரவாயில் பைபாஸில் விபத்துக்குள்ளாகியது. தாம்பரம் நோக்கி வந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற லாரி மோதியது. இதில் ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் என 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் மதுரவாயில் முதல் அனகாபுத்தூர் வரை எட்டு கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
