Chennai | தோழியுடன் செல்லும்போது மாணவருக்கு நேர்ந்த பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி
தோழியுடன் செல்லும்போது மாணவருக்கு நேர்ந்த பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி
தோழியுடன் செல்லும்போது மாணவருக்கு நேர்ந்த பயங்கரம் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை பெருங்களத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மணலியைச் சேர்ந்த மித்லேஷ் என்ற மாணவர், தனது தோழியுடன் வண்டலூர் நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. பலத்த சத்தத்துடன் கார் கவிழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், உடனடியாக இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
