Chennai | Tambaram | கார் பார்க்கிங்கில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காவலாளி - பின்னணி என்ன?
Chennai | Tambaram | கார் பார்க்கிங்கில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காவலாளி - தாம்பரத்தில் அதிர்ச்சி.. பின்னணி என்ன? சென்னை தாம்பரம் சானடோரியத்தில் காவலாளி ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தாம்பரம் கடப்பேரி நேரு நகரைச் சேர்ந்த 62 வயதான முனியன், மெப்ஸ் பொருளாதார மண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணிக்கு சென்ற அவர், நிறுவனத்தின் அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனியனின் தலையில் பலத்த காயம் இருப்பதால், அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற இரு கோணங்களில் போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர்
