

மாநகர பேருந்தில் கத்தியுடன் பயணித்து ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, வண்ணாரப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து ஜார்ஜ்டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, 17 வயதுக்கும் குறைவான ஆனந்த்ராஜ், தாமோதரன், ராஜா ஆகிய 3 பேரை, கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியிலும், 19 வயதான சிவாவை புழல்சிறையிலும் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவையடுத்து, சிவா புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.