சென்னையில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்.. மக்கள் கவனத்திற்கு

x

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் 2வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது...

நாட்டின் 75வது குடியரசு தினவிழா வருகிற 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது... முதல் ஒத்திகை நிகழ்ச்சியானது கடந்த சனிக்கிழமை நடந்தது... அதைத் தொடர்ந்து 2வது நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது... ஆளுநர், முதல்வர் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு நடைபெற்றது. வாத்தியங்கள் இசைப்போரும் ஒத்திகையில் கலந்து கொண்டனர்... துறை சார்ந்த 22 அலங்கார ஊர்திகளும் பங்கேற்றன...


Next Story

மேலும் செய்திகள்