பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை
Published on

* சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.

* ரிப்பன் மாளிகையின் பின்புறம் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் மற்றும் மாநகர காவல் துறை, சுகாதாரம், பொதுப்பணி, சாலை, மெட்ரோ நிர்வாகம், ராணுவம், விமானப் படை, கடலோர பாதுகாப்புப் படை, பிஎஸ்என்எல் உட்பட 40 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

* கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் கார்த்திகேயன், இன்னும் 15 நாட்களில் தூர்வாரும் பணிகள் நிறைவடையும் என தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com