ரேஸ் கிளப்பில் பணி வழங்க கோரிக்கை : 200க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்

சென்னை கிண்டியில், ரேஸ் கிளப்பில் பணி வழங்க கோரி, 200க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஸ் கிளப்பில் பணி வழங்க கோரிக்கை : 200க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம்
Published on

சென்னை கிண்டியில், ரேஸ் கிளப்பில் பணி வழங்க கோரி, 200க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ராஸ் ரேஸ் கிளப் நிறுவனத்தில், குதிரை பந்தய விளையாட்டிற்காக 13க்கும் மேற்பட்ட புக்கிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரேஸ் கிளப் நிர்வாகம் புக்கிகள், தங்களுக்கு 8 நபர்களுக்கு மேல் உதவியாளர் பணியில் அமர்த்த கூடாது என்று கட்டுப்பாட்டு விதித்துள்ளது. நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளே செல்லவும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் புக்கி உதவியாளராக பணியாற்றும் சுமார் 200க்கும் மேற்பட்டோர், ரேஸ் கிளப் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com