

சென்னை கிண்டியில், ரேஸ் கிளப்பில் பணி வழங்க கோரி, 200க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ராஸ் ரேஸ் கிளப் நிறுவனத்தில், குதிரை பந்தய விளையாட்டிற்காக 13க்கும் மேற்பட்ட புக்கிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரேஸ் கிளப் நிர்வாகம் புக்கிகள், தங்களுக்கு 8 நபர்களுக்கு மேல் உதவியாளர் பணியில் அமர்த்த கூடாது என்று கட்டுப்பாட்டு விதித்துள்ளது. நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளே செல்லவும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் புக்கி உதவியாளராக பணியாற்றும் சுமார் 200க்கும் மேற்பட்டோர், ரேஸ் கிளப் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.