

சென்னை மெரினா கடற்கரையில் பாஜக மீனவர் அணி சார்பில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கால் சாலையோரம் உள்ள மக்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடுக்குப்பத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு பாஜக மீனவர் அணியினர் உணவு வழங்கினர். ஊரடங்கு அமலில் உள்ள வரை இதுபோல் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.