சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்டும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு, மரங்களை வெட்டாமல் மாற்று இடத்தில் கூடுதல் கட்டடங்களை அமைக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.