"மயானத்தில் அனைத்து தரப்பினருக்கும் அனுமதி" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
"மயானத்தில் அனைத்து தரப்பினருக்கும் அனுமதி" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம் எரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்கு செல்லும் சாலையில், குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மயானத்தை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் பயன்படுத்த கிராம மக்கள் அனுமதிக்காததால், சாலை ஓரங்களில் உடல்கள் எரிக்கப்படுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, மரணம் அடைந்த பிறகும்கூட சாதி ஒரு மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில் நாம் வாழ்ந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும், மயானப் பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இதனை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com