Chennai | Exhibition | புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி“ துவக்கம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி“ துவக்கம்
சென்னை நந்தம்பாக்கத்தில் தூய்மையான எரிசக்தி எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையில் “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காாட்சி“ தொடங்கியது... இந்த 3 நாள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.. வாட்டர் டுடே நிறுவனத்தின் ஏற்பாட்டில் இக்கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சுமார் 16,000-க்கும் அதிகமான தொழில் வர்த்தக பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்களை பார்வையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்... மேலும், கூட்டாண்மைகளை உருவாக்கவும், வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் தொழில் துறைகளுக்கு இது ஒரு சிறந்த மேடையாக அமைகிறது.
