சென்னையை சேர்ந்த பொறியாளர் வெளிநாட்டில் மர்ம மரணம்

சென்னை திருவேற்காட்டை சேர்ந்த பிரபு என்ற கட்டிட பொறியாளர், அங்கோலா நாட்டில் உயிரிழந்துள்ளார்.
சென்னையை சேர்ந்த பொறியாளர் வெளிநாட்டில் மர்ம மரணம்
Published on
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த பிரபு என்ற கட்டிட பொறியாளர், அங்கோலா நாட்டில் உயிரிழந்துள்ளார். அங்குள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓராண்டாக பணிபுரிந்து வந்த அவர், கடந்த செவ்வாயன்று உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து, பிரபு குடும்பத்தினர் கேட்டபோது, பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பியதோடு, உடலை அங்கேயே அடக்கம் செய்வதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவு, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்துள்ள பிரபுவின் மனைவி திவ்யா, தனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மூன்றரை வயது மகனுடன் தான் ஆதரவின்றி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com