சார்ஜ் ஏறும்போது தீப்பிடித்து எரிந்த இ-பைக்.. துடிதுடித்து இறந்த கை குழந்தை - சென்னையில் அதிர்ச்சி
சென்னை மதுரவாயிலில் சார்ஜ் போட்டப்பட்டிருந்த இ-பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.அன்னை இந்திராகாந்தி நகர் பகுதியில் வீட்டில் சார்ஜ் போட்டப்பட்டிருந்த இ- பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் தம்பதி, குழந்தை உள்பட 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேலும் குழந்தையின் தந்தை கௌதம் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
