Chennai | Doctors | சென்னையில் அதிர்ச்சி - 10TH வரை படித்த டாக்டர்ஸ் 14 கிளினிக்.. சிக்கிய பெயர்க

10ம் வகுப்பு வரை படித்த மருத்துவர்களுக்கு 14 கிளினிக்..வரிசையாக சிக்கிய பெயர்கள்

சென்னையில் அதிர்ச்சி - பத்தாம் வகுப்பு வரை படித்த மருத்துவர்களுக்கு 14 கிளினிக்.. வரிசையாக சிக்கிய பெயர்கள் இழுத்து மூடப்பட்ட மிஸ்டர் ஹேர் கிளினிக் - போலி மருத்துவர்கள் கைது சென்னை அண்ணா நகர் மிஸ்டர் ஹேர் கிளினிக்கில், தவறான சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படும், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை ஜவகர் நகரை சேர்ந்த திவ்யா என்பவரிடம் ராஜாராம் என்பவர் அறிமுகமாகி தன்னை மருத்துவர் என்றும், இந்தியா முழுவதும் 14 கிளினிக்குகள் நடத்தி வருதாகவும் கூறியுள்ளார். மேலும் மருத்துவமனை கிளை தொடங்கி கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் தருவதாக கூறி, திவ்யாவிடம் இருந்து முன்பணமாக 30 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். இதனையடுத்து போலி மருத்துவர்கள் மூலம் செயல்பட்ட கிளினிக்கில் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையில் விசாரணை நடந்தது. அப்போது பஞ்சாப்பை சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், வேலூரைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் ஆகிய மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, கிளினிக் இழுத்து மூடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com