"பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்"...மாத்திரைகளை வழங்கிய உதவியாளர் - முற்றிய வாக்குவாதம் - அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருவோருக்கு உதவியாளர் மருந்துகளை வழங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கன்னி கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்திற்கு காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு சென்றுள்ளார் விக்னேஷ்... ஆனால் அங்கு மருத்துவர் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக உதவியாளர் ஒருவர் மருத்துகளை வழங்கியுள்ளார்... இதுகுறித்து வினவிய போது நோயாளிகளுக்கு மாத்திரைகளை வழங்க தாம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாம் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் என மிரட்டும் தொணியில் கூறி பகீர் கிளப்பியுள்ளார்... இதுகுறித்து விக்னேஷ் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்த நிலையில், அதன்பின்னர் மருத்துவர் வந்து மாத்திரைகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்