Chennai Corporation | 30 நாட்களுக்குள் கட்டாயம்.. | அடியோடு மாறும் ரூல்ஸ் | உடனே செக் பண்ணுங்க..
Chennai Corporation | 30 நாட்களுக்குள் கட்டாயம்.. | அடியோடு மாறும் ரூல்ஸ் | உடனே செக் பண்ணுங்க.. #chennai #chennaicorporation #waste சென்னையில் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கு கட்டாய பதிவு இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படும் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் மாநகராட்சி இணையதளத்தில் 30 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர மீட்டர் கட்டிடம் மற்றும் தினசரி 40 ஆயிரம் லிட்டர் நீர் பயன்படுத்துபவர்கள் மற்றும் 100 கிலோ திடக்கழிவு உற்பத்தி செய்பவர்கள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரிய அமைப்புகள் இதில் அடங்கும். கழிவுகளை மட்கும், மட்காத, அபாயகரமானவை என பிரித்து சேகரிக்க வேண்டும் என்றும் உயிரியல் கழிவுகளை வளாகத்திலேயே உரமாக்கல் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு முடியும் முன் பதிவு செய்யாதவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த விதிகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
