சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை 18 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான நிலவரத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் தலா 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com