சென்னை தரமணியில் கஞ்சா விற்ற இருவர் கைது

சென்னை தரமணியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை தரமணியில் கஞ்சா விற்ற இருவர் கைது
Published on

சென்னை தரமணியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தரமணி கானகத்தில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள், ஒடிசாவை சேர்ந்த புளு ஜின்னா மற்றும் அப்பகுதியை சேர்ந்த பாலாஜி என்பதும், இருவரும், ஒடிசாவிற்கு சென்று கஞ்சாவை வாங்கி, சென்னைக்கு கொண்டு வந்து செல்போனில் கேட்பவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com