அண்ணா பல்கலை. வெளியிட்ட முக்கிய தகவல் | Chennai | Anna University

தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்கள்

பணிபுரிவதாக கணக்கு காட்டிய விவகாரம் அண்மையில்

அம்பலத்திற்கு வந்தது.

இதைத் தொடர்ந்து மூவர் குழுவை அமைத்து, சம்பந்தப்பட்ட

கல்லூரிகள் செய்த முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த அறிக்கை தமிழக அரசிடமும் , தமிழக ஆளுநரிடமும்

வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள்

தெரிவித்தன.

மோசடி செய்த 295 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், கல்லூரிகள் தரப்பிலான விளக்கம் இன்று மாலைக்குள் பெறப்பட்டு விடும் என்று கூறியுள்ளது.

தவறு செய்த 295 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஓராண்டுக்கு ரத்து செய்ய பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

295 கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்திருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com