Chennai | வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்.. முன்னாள் ஊழியர் செய்த செயலால் கதிகலங்கிப்போன ஓனர்
Chennai | வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரம்.. முன்னாள் ஊழியர் செய்த செயலால் கதிகலங்கிப்போன ஓனர்
சென்னை கொரட்டூரில், தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற, முன்னாள் ஊழியர் சதீஷ் கைது செய்யப்பட்டார். நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து நிறுவன உரிமையாளர் உமர்பரூக்கை வழிமறித்து பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை காவல்துறை தேடி வருகின்றது.
