

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களிலும் மறு அறிவிப்பு வரும் வரை மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்குமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் விலையில்லா உணவிற்கு ஆகும் செலவின தொகையை, உணவு வழங்க கோரிய தன்னார்வலர்களிடம் பெற்று வங்கி கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.