சென்னையில் விமானங்கள் மீது அடிக்கப்படும் லேசர் லைட்... தரையிறங்கும் போது அதிர்ச்சி சம்பவங்கள்

x

வானில் பறக்கும் விமானங்கள் மீது யாரேனும் லேசர் லைட்டுகளை அடித்து விளையாடினால் அவர்கள் மீது, பொதுமக்கள் புகார் தெரிவிக்க முன்வர வேண்டும் என இந்திய விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையில் விமானங்கள் தரையிறங்கும் போது, ஒரு சிலர் அதன் மீது லேசர் லைட்டை அடித்து விளையாடுகின்றனர். இது, விமானிகளின் பார்வையை ஒரு சில நொடிகள் மறைப்பதால், பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், இதுபோன்ற செயல்கள் சட்டப்படி குற்றம் என்றும், இத்தகைய செயல்களை யாரேனும் செய்தால், அவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் இந்திய விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்