சென்னை ஏர்போர்ட்-ஐ அதிர வைத்த சம்பவம்...ஊழியரே செய்த பகீர் காரியம் - பிடிபட்ட அந்த மாறியான பொருள்

x

இரவு பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக சென்ற ஊழியரைப் பாதுகாப்புப் பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சோதனையிட்டனர். போலீசார் ஊழியரின் ஷூவைக் கழற்ற முயன்ற போது அவர் வாக்குவாதம் செய்த நிலையில், வலுக்கட்டாயமாக சோதனையிட்டதில் அவர் ஷூவுக்குள் 3 சிறிய பார்சல்களில் தங்கப் பசையைக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 85 லட்ச ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 281 கிராம் எடைகொண்ட தங்கப் பசையை கைப்பற்றியதுடன், ஊழியரைக் கைது செய்தனர். தங்கப்பசை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது...

இது தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்