Chennai Airport | இராணுவ வீரர் பையில் இருந்த துப்பாக்கி குண்டு | சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
Chennai Airport | இராணுவ வீரர் பையில் இருந்த துப்பாக்கி குண்டு | சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
துப்பாக்கி குண்டுடன் விமான நிலையம் வந்த இராணுவ வீரர் சென்னை விமான நிலையத்திற்கு பையில் துப்பாக்கி குண்டுடன் வந்த எல்லை பாதுகாப்பு படை வீரரால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரரான யமலா குமார், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அவரது கைப்பையில் துப்பாக்கி குண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவறுதலாக துப்பாக்கி குண்டினை பைக்குள் வைத்துவிட்டதாகவும், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து எழுதி வாங்கிக்கொண்டு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
