Chennai | Accident | ஹாஸ்பிடலில் பலியான சிறுவன் | கதறி அழும் உறவினர்கள்
Chennai | Accident | ஹாஸ்பிடலில் பலியான சிறுவன் | கதறி அழும் உறவினர்கள்
கிண்டி மருத்துவமனையில் சிறுவன் உயிரிழப்பு - உறவினர்கள் குற்றச்சாட்டு கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுவன் தர்ஷன் சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த நிலையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எலும்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், முறையான சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என சிறுவனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேசமயம், நுரையீரல் தொற்று ஏற்பட்டு தர்ஷன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
