Chennai | சாலையில் தேங்கிய கழிவுநீரால் விபத்து..பதற்றத்தில் பெண் செய்த செயலால் நேர்ந்த பரிதாபம்

சென்னை கொரட்டூரில் நடைபெற்று வரும் பாதாள கழிவுநீர் கால்வாய் பணியின் போது, மோட்டார் மூலம் கழிவுநீரைச் சாலையிலேயே விடுவதால் ஏற்பட்ட வாகன விபத்தில் இளம்பெண் காயமடைந்தார்... சாலையில் தேங்கிய கழிவுநீரால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் திடீரென டூவீலரை வலதுபக்கம் திருப்பியுள்ளார்... அப்போது பின்னால் வந்த லோடு வாகனம் மோதியதில், இருசக்கர வாகனம் கீழே சாய்ந்தது... பதட்டத்தில் இளம்பெண் இருசக்கர வாகனத்தின் ஆக்சிலேட்டரை முறுக்கியதால் வாகனத்துடன் அப்பெண் இழுத்துச் செல்லப்பட்டு சாலை ஓரத்தில் விழுந்தார்... இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினார்...

X

Thanthi TV
www.thanthitv.com