குளிக்க சென்ற இடத்தில் மாயமான 3 மாணவர்கள் - 2 வது நாள் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் மாணவர்களின் உயிர் பறிபோயிருக்கிறது. சுமார் 300 அடி ஆழம் கொண்ட இந்த குட்டையில், தனியார் கல்லூரி மாணவர்களான தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் மற்றும் விஜய் சாரதி ஆகியோர் தங்களின் நண்பர்களுடன் குளிக்கச் சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். மூவருக்கும் நீச்சல் தெரியாது எனக் கூறப்படுகிறது. குட்டையில் திடீரென மாயமான மாணவர்கள் மூவரும் ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com