Nellai | Car Festival | திடீரென நிறுத்தப்பட்ட தேர் | நெல்லையில் பரபரப்பு
வள்ளியூரில் காவல்துறை வாகனம் மீது மோதிய தேர் - பரபரப்பு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் திருவிழாவில் காவல் வாகனத்தின் மீது தேர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது... நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது போலீசார் வாகனம் மீது தேர் மோதிய நிலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாகனம் அகற்றப்பட்ட பின்னர் தேரோட்டம் தொடர்ந்து நடந்தது
