Vinayagar Rally | மாறி மாறி முழக்கம்.. பல்லடம் பள்ளிவாசல் அருகே பெரும் பரபரப்பு
``வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’’ ``அல்லாஹு அக்பர்’’ - மாறி மாறி முழக்கம்.. பல்லடம் பள்ளிவாசல் அருகே பெரும் பரபரப்பு
#vinayagarrally #palladamissue
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பள்ளிவாசல் அருகே இருதரப்பினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடம் அறிவொளி நகர் பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சிலையுடன் ஊர்வலம் பல்லடம் பெரிய பள்ளிவாசல் அருகே சென்றபோது, "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளிவாசல் பகுதியில் இருந்த சிலர் "அல்லாஹு அக்பர்"” என முழக்கமிட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், இருதரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் ஊர்வலம் நடைபெற்றது..
