Chain Snatching | வீட்டை உடைத்து உள்ளே புகுந்து தாலி பறிப்பு.. நடந்ததை சொல்லும் போதே திகில்

Chain Snatching | வீட்டை உடைத்து உள்ளே புகுந்து தாலி பறிப்பு.. நடந்ததை சொல்லும் போதே திகில்

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை திருட்டு திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கல் அடுத்த அத்தங்கிகாவனூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பணம் மற்றும் நகைகளை திருடியுள்ளனர். மேலும், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தாலிச் செயினையும் பறித்துள்ளனர்.... இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சல் போட்ட உடனேயே திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர்.... திருட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com