பெண் குழந்தைகளுக்கான மத்திய அரசு திட்டம் - சென்னையில் பெருகும் ஆதரவு
சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு கடந்த 2015-ல் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து 2025 ஜனவரி வரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 21, 28, மார்ச் 10 ஆகிய தேதிகளில் செல்வமகள் சேமிப்புக் கணக்குகளை தொடங்குவதற்கான சிறப்பு முகாம்கள் சென்னையில் நடத்தப்படவுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
Next Story
