மத்திய அரசின் படைவீரர்களுக்கான முன்னுரிமை பட்டியலில், சில பிரிவுகளை நீக்கிய தமிழக அரசின் அரசாணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த படை வீரர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ இடம் வழங்கக் கோரி மாணவர் குறளரசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.