Thanjavur Temple | சிறப்பு பூஜைகளுடன் நடப்பட்ட பந்தக்கால் | தஞ்சையில் கோலாகல தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து, தேவாரம்–திருவாசகம் பாடி பந்தக்கால் நடப்பட்டது. 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 27ம் தேதி நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com