Cauvery River| காவிரியில் குதித்த யாரென்ற தெரியாத இளம்பெண் - உயிரையே பணயம் வைத்த டிரைவர்
காவிரி ஆற்றில் குதித்த பெண் மீட்பு - உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றிய ஓட்டுநர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து த*கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை, ஓட்டுநர் ஒருவர் சாதுரியமாக மீட்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு - நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் பாலத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக இளம் பெண் ஒருவர் திடீரென ஆற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற சரக்கு வாகன ஓட்டுநர், உடனடியாக ஆற்றில் குதித்து பொதுமக்களின் உதவியுடன் கயிறு கட்டி அப்பெண்ணைப் பத்திரமாக மீட்டார். பள்ளிபாளையம் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் உயிரைப் பொருட்படுத்தாமல் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரின் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
