நாயை கம்பியால் அடித்து கொன்ற நபர் மீது வழக்கு பதிவு
நாயை கம்பியால் அடித்து கொன்ற நபர் மீது வழக்கு பதிவு
நாயை கம்பியால் அடித்து கொன்ற நபர் மீது வழக்கு பதிவு
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் நாயை கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முருகன் என்பவர் வளர்த்து வந்த நாயை, அண்டை வீட்டுக்காரரான சின்னத்துரை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிய நிலையில், விலங்குகள் மீதான கொடுமைகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என விலங்கு நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
