மன்சூர் அலிகான் மகன் மீது பாய்ந்த வழக்கு... கிளம்பிய புது பஞ்சாயத்து...

மன்சூர் அலிகான் மகன் மீது பாய்ந்த வழக்கு... கிளம்பிய புது பஞ்சாயத்து... 67 வயது முதியவர் பரபரப்பு புகார்.

சென்னையில் 35 லட்சத்தை திருப்பி தராத விவகாரத்தில் ஆட்களுடன் வந்து மிரட்டியதாக 67 வயது முதியவர் கொடுத்த புகாரில், மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மன்சூர் அலிகான், ஃபிளாட் வாங்குவதற்காக கொடுத்த 35 லட்சத்தை, திருப்பி தராமலும், ஃபிளாட்டை வாங்கி தராமலும் வரிசை கனி என்ற முதியவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்குக்கும், வரிசை கனிக்கும் தகராறு ஏற்பட்டது. வரிசை கனி அளித்த புகாரின் பேரில் துக்ளக் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வரிசை கனியிடம் போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, மன்சூர் அலிகான் குறுக்கிட்டு திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் சினிமாவில் வசனம் பேசுவது போல் பேச கூடாது என கூறியும், நீதிமன்றத்தின் மூலம் பணத்தை பெற்று கொள்ளுமாறு சொல்லியும் அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com